ஐங்குறுநூறு குறிஞ்சி வாழ் உயிரினங்கள்
Abstract
உலகில் பண்பாட்டில் சிறந்ததான பூமியாக பாரத பூமித் திகழ்கின்றது. இத்தகைய பண்பாண்டின் சிறப்பு என்ன? என்ற கேள்வி எழுமாயின் பல்லாயிரம் ஆண்டுகள் அல்ல அல்ல பல இலட்சம் ஆண்டுகள் முன்னதாகவேத் தோன்றிய பழம்குடியாகவும் பண்பாட்டின் பிறப்பிடமாகவும் தமிழகம் திகழ்கின்றது என்பதுவே அதன் சிறப்பு. எனவே, பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்று பாரதி போற்றுகின்றார். அத்தகைய சிறப்புகளை ஆவணங்களாக பதிவு செய்துள்ள முறைகளில் தக்கச் சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. சங்க இலக்கியங்களில் ஐந்தினை என்றும் திணை சார்ந்த வாழ்வியல் சூழலினையும் வாழ்ந்தமையினை எடுத்துரைக்கின்றார். அவ்வகையில் சங்க இலக்கியங்களில் ஒன்றான ஐங்குறுநூறு சூழலினுள் அமைந்துள்ள குறிஞ்சி நிலம் சார்ந்த உயிர்களைப் பற்றிய செ#திகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது