சங்க அகப்பொருள் சூழல் மரபில் திருவாய்மொழி
Abstract
திருமங்கை ஆழ்வாரை வைணவப் பெரியோர்கள் பரகாலன் எனப் போற்றுவார்கள். கொங்கு மலர் குழலியர் கோன், கொற்றவேல், பரகாலன், கலியன், ஆலிநாடன், அருள்மாரி என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்ற திருமங்கை ஆழ்வார் பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக் கூற்றிருக்கைத், சிறியதிருமடல், பெரிய திருமடல் எனும் ஆறு பிரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். இவர் இயற்றிய திருவெழு கூற்றிருக்கை, திருக்குறுந்தாண்டகம் தவிர ஏனையவை அகப்பொருள் செய்திகள் செறிந்து காணப்படுகின்றன. இவர் பிரபந்தங்கள் யாவும் நம்மாழ்வாரை அடியொற்றி அமைந்திருக்கின்றன. இவற்றில் காணலாகும் அகமரபுகள் சங்க இலக்கியங்களோடு ஒப்புமைப்படுத்தி ஆ#வதாக .இவ் ஆய்வானது அமைகின்றது